tag:blogger.com,1999:blog-690368576591814769.post6838034440445110309..comments2023-09-27T17:23:59.866+08:00Comments on இலக்கிய இன்பம்: இப்படை தோற்கின் எப்படை வெல்லும்!agaramamuthanhttp://www.blogger.com/profile/16067351715484474918noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-690368576591814769.post-6761281858333124782008-12-07T07:56:00.000+08:002008-12-07T07:56:00.000+08:00வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் அய்யா! என்னால் ...வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் அய்யா! என்னால் முடிந்தவரைத் தொடர்ந்து இலக்கிய இன்பம் தரமுயல்கிறேன். அது இன்பமா துன்பமா என்பதைத் தங்களைப் போன்றவர்கள் தான் சொல்லவேண்டும்.அகரம் அமுதாhttps://www.blogger.com/profile/06401122873972864207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-690368576591814769.post-90191715353708985042008-12-07T00:23:00.000+08:002008-12-07T00:23:00.000+08:00நீண்ட காலத்திற்குப் பின்னர் மீண்டும் தங்கள் கைவண்ண...நீண்ட காலத்திற்குப் பின்னர் மீண்டும் தங்கள் கைவண்ணத்தில் இலக்கியம் பருகியதில் பெரும் இன்பம்!<BR/><BR/>நிகழ்கால நடப்பை இலக்கிய நயத்தோடு தங்களுக்கே உரிய பாணியில் மிக அருமையாக வழங்கியுள்ளீர்கள்.<BR/><BR/>எந்த ஒரு போராகட்டும்.. போராட்டமாகட்டும்.. தீவிரவாதமாகட்டும்.. அததற்கு ஒரு நியாயவாதத்தைக் கற்பித்துக்கொள்கின்றனர்.<BR/><BR/>இதனால், எது போராட்டம்; எது தீவிரவாதம் என்று கண்டுபிடிப்பதற்குள் நமது ஆயுளே முடிந்துவிடும் போலிருக்கிறது.<BR/><BR/>//கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்<BR/>களைகட் டதனொடு நேர்! //<BR/><BR/>வள்ளுவர் வாய்மொழி இன்றைக்கும் பொய்யாமொழியாக நிலைபெற்று நிற்கிறது.<BR/><BR/>இனி, தொடர்ந்து இலக்கிய இன்பம் பரிமாறப்படும் தானே..!சுப.நற்குணன்,மலேசியா.https://www.blogger.com/profile/14702174238706253994noreply@blogger.comtag:blogger.com,1999:blog-690368576591814769.post-56074661785926087252008-12-06T11:13:00.000+08:002008-12-06T11:13:00.000+08:00////ஆயுதத்திற்கு ஆயுதமே பதில் சொல்லும் நோக்கில் போ...////ஆயுதத்திற்கு ஆயுதமே பதில் சொல்லும் நோக்கில் போவோமானால் அது மென்மேலும் பிரச்சனையை வளர்த்துவிடும் இல்லையா? ////<BR/><BR/><BR/>முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும் என்பதுதானே பழமொழி!? இங்கு (சிங்கையில்) கஞ்சா போன்ற தடைசெய்யப்பட்ட பொருட்களைக் கடத்தினாலே மரணதண்டனை ஒன்றுதான் தீர்ப்பு. மரணதண்டனைக்குப் பயந்து கொண்டே இங்கு இதுபோன்ற தவறுகளை யாரும் புரிய முன்வருவதில்லை. அதுபோல் இந்தியாவில் தீவிர வாதிஎன அறத்துறையால் முடிவுசெய்யப்பட்டால் மறுமொழியின்றித் தூக்கிலிடுவதே பின்வருவோருக்கு அச்சத்தை ஏற்படுத்தும். வன்முறையை வன்முறை கொண்டு அடக்குவது தகாதென்பது தனிமனிதனுக்கு வேண்டுமானால் ஏற்புடையதாக இருக்கலாம். ஆனால் அரசு என்று வருகிறபோது இவ் அறம் நேர்மை என்பதெல்லாம் பொருந்தாது.<BR/><BR/>கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்<BR/>களைகட் டதனொடு நேர்! என்கிறார் வள்ளுவர்.<BR/><BR/>நாட்டின் நலன் கருதிக் கொடியவர்களைக் கொலைசெய்வதன் மூலம் தண்டித்தல் என்பது பயிர்களுக்கிடையில் தோன்றி முகம் காட்டும் புற்களைக் களைதலொக்கும்.<BR/><BR/><BR/>பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே<BR/>நல்லார் தொடர்கை விடல்<BR/><BR/>நல்லாரது தொடர்பைக் கைவிடுதல் பலருடன் பகைகொள்வதைவிடப் பத்துமடங்கு தீமையுடைத் தென்பதைப் பாகிசுதானுக்கு உணர்த்தல் வேண்டும்.<BR/><BR/>வருமுன் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்<BR/>வைத்தூறு போலக் கெடும்!<BR/><BR/>தீவிர வாதத்தின் தாக்குதலுக்கு அஞ்சி உலகநாடுகள் பலவும் கடுமையான சட்டங்களும் நடவடிக்கைகளும் எடுத்துவரும் வேளையில் இந்தியா மெத்தனப் பொக்கைக் கடைபிடிப்பதாலேயே எரிமுன்னர் வைத்த வைக்கோல் போரே போல் எம்மக்கள் மாண்டுமடிகிறார்கள்.<BR/><BR/>////அது போக ஒரு தனிபட்ட நாட்டின் ஏழ்மையை பணக்கார நாடுகள் பணத்தின் வழி தூண்டுதல் செய்தும் இவ்வாறு பகைமையை வளர்க்கலாம் இல்லையா?////<BR/><BR/>ஆம் வாய்ப்பிருக்கிறது. மறுப்பதற்கில்லை. அரசு என்று வருகிறபோழ்து அவ்வரசைக் கவிழ்க்க அல்லது சீர்குலைக்க பலவாரான சூழ்ச்சிகளும் அரங்கேறத்தான் சேய்யும். சூழ்ச்சிகளின்றி அரசில்லை. அதைத்தான் வடமொழியில் ராச தந்திரம் என்கிறார்கள்.<BR/><BR/>எது எப்படியோ<BR/><BR/>செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன்<BR/>வெருவந்து வெய்து கெடும்!<BR/><BR/>போர்வருமுன் தனக்கும் தன் நாட்டிற்கும் காப்பாக அரண் செய்து கொள்ளாத அரசு போர்வந்தக்கால் அஞ்சிக் கெடும். இங்கு போர் எனக்குறிப்பிட்டது ஓர் நாட்டிற்கும் இன்னொரு நாட்டிற்கும் இடையில் தோன்றுவதை மட்டும் குறிப்பிடுவதன்று. தீவிர வாதிகளால் புனிதப் போர் எனும் பெயரில் நடாத்தப்படும் முதுகெலும்பில்லாச் செயலையும் குறிப்பதாகும்.அகரம் அமுதாhttps://www.blogger.com/profile/06401122873972864207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-690368576591814769.post-51926653601015867982008-12-06T10:27:00.000+08:002008-12-06T10:27:00.000+08:00சிறப்பான கட்டுரை ஐயா...ஒரு சமுதாய பிரச்சனையை இலக்க...சிறப்பான கட்டுரை ஐயா...<BR/><BR/>ஒரு சமுதாய பிரச்சனையை இலக்கிய ரசனையோடு சமர்ப்பித்துள்ளீர்கள்... ஆயுதத்திற்கு ஆயுதமே பதில் சொல்லும் நோக்கில் போவோமானால் அது மென்மேலும் பிரச்சனையை வளர்த்துவிடும் இல்லையா? <BR/><BR/>அது போக ஒரு தனிபட்ட நாட்டின் ஏழ்மையை பணக்கார நாடுகள் பணத்தின் வழி தூண்டுதல் செய்தும் இவ்வாறு பகைமையை வளர்க்கலாம் இல்லையா?VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.com